கோப்புப்படம் 
உலக செய்திகள்

அமெரிக்காவில் 5-ந்தேதி முதல் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

அமெரிக்காவில் 5-ந்தேதி முதல் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் சீன பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி வருகின்றன.

இந்த நிலையில் சீன பயணிகளுக்கு அமெரிக்காவிலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் வெளியிட்டுள்ளது.

சீனாவில் இருந்து அமெரிக்கா செல்கிறவர்கள், எந்த நாட்டினராக இருந்தாலும், தடுப்பூசிகள் போட்டிருந்தாலும் போட்டிரா விட்டாலும் அவர்களுக்கு 5-ந் தேதி முதல் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டிருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து