image courtesy: AFP  
உலக செய்திகள்

நைஜரில் இருந்து வெளியேறும் அமெரிக்க படைகள்

முதற்கட்டமாக அடுத்த ஒரு மாதத்தில் 1,000 ராணுவ வீரர்கள் நைஜரில் இருந்து வெளியேற்றப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

நியாமி,

ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசும் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்த்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அங்கு பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாட்டின் படைகள் முகாமிட்டு இருந்தன. ராணுவம் ஆட்சிக்கு வந்த பிறகு பிரான்ஸ் நாட்டின் படைகளை வெளியேறுமாறு ராணுவ ஆட்சிக்குழு தலைவர் அலி மஹாமன் லாமைன் சைனி உத்தரவிட்டார். அதன்படி பிரான்ஸ் நாட்டு படைகள் நைஜரில் இருந்து வெளியேறின.

இந்த நிலையில் நைஜரில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளும் வெளியேற வேண்டும் என அங்குள்ள பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திடம் நைஜர் ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக அடுத்த ஒரு மாதத்தில் 1,000 ராணுவ வீரர்கள் நைஜரில் இருந்து வெளியேற்றப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்