கோப்புப்படம் 
உலக செய்திகள்

சீன கப்பல்கள் அடிக்கடி அத்துமீறி நுழைவது குறித்து அமெரிக்கா-பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கவலை

சீன கப்பல்கள் அடிக்கடி அத்துமீறி நுழைவது குறித்து அமெரிக்கா-பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மணிலா,

அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் வெளியுறவு மந்திரி டெல்பின் லோரென்சானா ஆகிய இருவரும் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தென் சீனக் கடலில் உள்ள விட்சன் ரீப் தீவில் சீன கப்பல்கள் அடிக்கடி அத்துமீறி நுழைவது குறித்து இருவரும் கவலை தெரிவித்தனர். மேலும் தென் சீனக் கடலின் நிலைமை மற்றும் சமீபத்தில் சீனக் கப்பல்களை விட்சன் ரீப்பில் இருந்து வெளியேற்றுவது குறித்து இருந்து விவாதித்தனர்.

முன்னதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 250 க்கும் மேற்பட்ட சீனக் கப்பல்கள் தீவுகள் மற்றும் பவளப்பாறைகள் அருகே காணப்பட்டதாகக் தெரிவித்திருந்தது. இந்த கப்பல்களை தென் சீன கடல் பகுதிகளில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே கடல் பகுதி தனக்கு சொந்தமானது என்றும், மோசமான கடல் சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக சீனக் கப்பல்கள் அங்கே தங்கியிருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...