கோப்புப்படம் 
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி, கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது: சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியில் தகவல்

கொரோனா தடுப்பூசி, கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது என்று சுவிட்சர்லாந்து நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியா உள்பட பல நாடுகளில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிலையில் கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறபோது, அது அவர்களது கருவுக்கும், நஞ்சுக்கொடிக்கும் பாதுகாப்பு அளிக்கிறது, அத்துடன் கர்ப்ப கால ஆபத்துகளில் இருந்தும் பாதுகாப்பை அதிகரிக்கிறது என்று சுவிஸ் நாட்டில் சுவிட்சர்லாந்து நாட்டு வைராலஜி மற்றும் நோய் எதிர்ப்பியல் நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி விஞ்ஞானிகள் கூறும்போது, கர்ப்பிணிகள் அதே வயது கொண்ட மற்றவர்களை காட்டிலும் கொரோனா தொற்று பரவுவதற்கு 70 சதவீதம் கூடுதல் வாய்ப்பு உள்ளது. கடுமையான பாதிப்பு அபாயமும் 10 சதவீதம் அதிகம் என தெரிவித்தனர். எனவே கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறபோது, அது அவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்