உலக செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 2-வது மாடியிலிருந்து குழந்தையை கீழே வீசிய தந்தை!

அந்த குழந்தையை கீழே நின்று கொண்டிருந்தவர்கள் பத்திரமாக பிடித்து கொண்டனர்

தினத்தந்தி

நியூ ஜெர்சி,

அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் அந்த வீட்டின் மேல்தளத்தில் தங்கியிருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்து கொண்டிருந்தனர்.

தகவலறிந்து உடனே தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் தீ மளமளவென பரவியது.

உடனே அவர்கள் மாடியிலிருந்து வீட்டின் உரிமையாளரிடம் அவர்களுடைய கைக்குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி கீழே வீசும்படி கூறினர். அவரும் சற்றும் தாமதிக்காமல் 2-வது மாடியிலிருந்து தனது 3 வயது குழந்தையை கீழே நின்று கொண்டிருந்த மீட்பு படையினரை நோக்கி வீசினார். அந்த குழந்தையை கீழே நின்று கொண்டிருந்தவர்கள் பத்திரமாக பிடித்துக் கொண்டனர்.

பின்னர் அவரும் கீழே குதித்து உயிர் தப்பினார். அதிர்ஷ்டவசமாக அதில் அந்த குழந்தைக்கு பெரிதாக காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

மேலும் அந்த விபத்தில் அந்த கட்டிடத்தில் இருந்த 50 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த காட்சிகள் மீட்புப்படையினரின் தலை கவசத்தில் உள்ள கேமராவில் வீடியோவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டதால், வீடியோவில் தெளிவாக காட்சிகள் பதிவாகவில்லை.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை