உலக செய்திகள்

"வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" - இலங்கை அரசு

பிராந்திய ரீதியிலான வெளியுறவு கொள்கை வகுப்பின் போது இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கொழும்பு,

இந்தியா, சீனா இடையே உரசல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகள் உடனான உறவை சீனா தெடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்த வகையில் இலங்கையிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு மதிப்பளிக்கப்படும் என புதிதாக பெறுப்பேற்றுள்ள இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் உள்ள எந்தவெரு நாடும், மற்றெரு நாட்டுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த அனுமதித்தால் இலங்கை அனுமதிக்காது என்றும், குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக அத்தகைய நிலையை இலங்கை ஒருபேதும் எடுக்காது என ஜெயநாத் கொலம்பேஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹம்பந்தோட்டா துறைமுக பணிகளை மேற்கெள்ள இந்தியா மறுத்ததால் தான் சீன நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அங்கு வணிகரீதியான பணிகள் தான் நடைபெறுவதாகவும் ராணுவ ரீதியிலான பணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார். கெழும்பு கிழக்கு முனைய பணிகள் தெடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார். ராணுவ பின்புலம் உள்ள ஒருவர், இலங்கை வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்