உலக செய்திகள்

குளிர்கால ஒலிம்பிக் போட்டி; பெய்ஜிங்கில் தொடங்கிய தீப தொடர் ஓட்டம்

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம் நடைபெறுகிறது.

தினத்தந்தி

பெய்ஜிங்,

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 4-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகின்றன. கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பீஜிங்கில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான இறுதி கவுண்ட்-டவுன் பாரம்பரிய தீப தொடர் ஓட்டத்துடன் தொடங்கியது. இன்று காலை ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், அடுத்த 3 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அதனை ஏந்தி செல்ல உள்ளனர். கோடைக்கால அரண்மனை, சீனப் பெருஞ்சுவர் உள்ளிட்ட சீனாவின் முக்கிய அடையாளங்களைக் கடந்து இந்த தீபம் கொண்டு செல்லப்பட உள்ளது.

சீனாவில் அண்மைக் காலமாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஒலிம்பிக் தொடர்பான நிகழ்வுகளை மிகுந்த கட்டுப்பாடுகளோடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம், விளையாட்டு வீரர்கள் மற்றும் பணியாளர்கள் நிரம்பிய ஒரு மூடப்பட்ட வளையத்திற்குள் தான் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்