உலக செய்திகள்

மான்செஸ்டர் குண்டுவெடிப்பு: பெண் உட்பட ஆறு பேர் கைது

மான்செஸ்டரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக காவல்துறையினர் ஆறு பேரை கைது செய்தனர். ஆறு பேரில் ஒருவர் பெண் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

லண்டன்

திங்களன்று அமெரிக்க பாப் பாடகர் அரியானே கிராண்டேவின் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் இறந்தனர். காயமடைந்தோர் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. முதலில் 59 இருந்த இந்த எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாகியுள்ளது. இவர்களில் 69 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; இதில் 20 பேர் நிலை கவலைக்கிடமானது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டில் லண்டனில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களுக்குப் பிறகு நடந்த பெரிய குண்டுவெடிப்பாகும் இது. தற்கொலைப் படையாக செயல்பட்ட சல்மான் அபேதியின் சகோதரனான இஸ்மாயில் அபேதி என்பவரை காவல்துறையினர் லிபியாவில் கைது செய்துள்ளனர். தற்கொலைப்படையாக செயல்பட்ட அபேதி தனியாக செயல்படவில்லை என்று ஏற்கனவே சந்தேகம் எழுந்தது. அபேதி சகோதரர்கள் லிபியா நாட்டவர் என்றும், இதில் சல்மான் அடிக்கடி சொந்த நாடு சென்று பெற்றோரை சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அபேதியின் நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருக்கு சிறிதளவு தகவல் கிடைத்திருந்தது என்றும் அது லிபியாவில் நடந்தவை என்றும் சொல்லப்படுகிறது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் பொதுமக்களை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது, பக்கிங்ஹாம் அரண்மனையின் முன்பு நடைபெறும் பாதுகாவலர் பணி மாறும் நிகழ்ச்சியும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜூன் 8 ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மீண்டும் தொடங்கவுள்ளது. ஒருவேளை மேலும் தாக்குதல்கள் தொடரும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தேர்தலே கூட தள்ளிப்போகலாம் என்ற ஊகமும் எழுந்துள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்