கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.37 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14.33 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.37 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 16,37,09,076 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14,33,19,328 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33 லட்சத்து 92 ஆயிரத்து 944 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,69,96,804 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,02,478 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு - 3,37,15,951, உயிரிழப்பு - 6,00,147, குணமடைந்தோர் - 2,71,36,020

இந்தியா - பாதிப்பு - 2,49,64,925, உயிரிழப்பு - 2,74,411, குணமடைந்தோர் - 2,11,67,609

பிரேசில் - பாதிப்பு - 1,56,27,475, உயிரிழப்பு - 4,35,823, குணமடைந்தோர் - 1,40,97,287

பிரான்ஸ் - பாதிப்பு - 58,77,787, உயிரிழப்பு - 1,07,616, குணமடைந்தோர் - 51,16,705

துருக்கி - பாதிப்பு - 51,17,374, உயிரிழப்பு - 44,760, குணமடைந்தோர் - 49,47,256

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

ரஷ்யா - 49,40,245

இங்கிலாந்து - 44,50,777

இத்தாலி - 41,59,122

ஸ்பெயின் - 36,04,799

ஜெர்மனி - 36,02,939

அர்ஜெண்டினா- 33,07,285

கொலம்பியா - 31,18,426

போலந்து - 28,54,079

ஈரான் - 27,51,166

மெக்சிக்கோ - 23,81,923

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்