உலக செய்திகள்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89 லட்சத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89 லட்சத்தை தாண்டியுள்ளது.

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் மனித குலத்திற்கே பெரும் சவால் விடுத்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டறியும் பணியில் உலகின் முன்னணி நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 89 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலக அளவில் மேலும் 1,55,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 89,06,655 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா வைரசால் 4,415 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை தற்போது 4,66,253 ஆக உயர்ந்துள்ளது கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 47,32,888 பேர் குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும் (பாதிப்பு - 23,30,311 பேர், உயிரிழப்பு - 1,21,979 பேர்) இரண்டாவது இடத்தில் பிரேசிலும் (பாதிப்பு - 10,70,139 பேர், உயிரிழப்பு - 50,058 பேர்), மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் (பாதிப்பு - 5,76,952 பேர், உயிரிழப்பு - 8,002 பேர்) உள்ளன. இந்தப்பட்டியலில் இந்தியா 4 வது இடத்தில் நீடித்து வருகிறது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை