படம்: PTI 
உலக செய்திகள்

ராணுவம் எந்த நொடியிலும் செயல்பட, போர் தயார்நிலையில் இருக்க வேண்டும் - சீன அதிபர் உத்தரவு

சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நாட்டின் இராணுவம் 'எந்த நேரத்திலும் செயல்பட' தயாராக இருக்குமாறு உத்தரவிட்டார், மேலும் முழுநேர போருக்கும் தயார்நிலையில் இருக்கவேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

பீஜிங்

சீன அதிபர் ஜின்பிங் கையெழுத்திட்ட 2021 ஆம் ஆண்டில் மத்திய இராணுவ ஆணையத்தின் (சிஎம்சி) உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

எந்த நேரத்திலும் ராணுவம் செயல்பட தயாராக இருக்க வேண்டும். முழுநேர போருக்கும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் . ராணுவ பயிற்சியை அதிகரிக்க வேண்டும்

ராணுவம் மற்றும் வீரர்களுக்கான பயிற்சியில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதை கணிசமாக அதிகரிக்க வேண்டும். ராணுவத்தில் புதிய கருவிகள் மற்றும் படை வீரர்களை இணைப்பதை அதிகரிக்க வேண்டும்.

ஜூலை 1 ம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கபட்ட 100 வது ஆண்டு விழாவை கொண்டாடுவதற்காக மத்திய இராணுவ ஆணையத்தின் உத்தரவுகளை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்' என்று அவர் கூறி உள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு