பொகோட்டா
வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஓடும் காரில் மேலாடையை கழற்றி இளம்பெண் சாகசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், கானா அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் கொலம்பியா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இளம் ரசிகைகள் சிலர் இரவில் மதுபானம் குடித்து விட்டு, போதையில் காரில் சென்றுள்ளனர்.
அப்போது, அந்த காரின் பின்பகுதியில் இருந்த இளம்பெண் காரின் ஜன்னல் வழியே வெளியே தலையை நீட்டியபடி எழுந்து நின்றார்.
அவருக்கு போட்டியாக, காரின் முன்பக்கத்தில் இருந்த இளம்பெண் ஒருவர் போதையின் உச்சத்தில் காருக்கு வெளியே தலையை நீட்டி, நின்றதுடன், திடீரென்று அணிந்திருந்த ஒரேயொரு மேலாடையையும் கழற்றினார். பின்னர் அந்த நிலையிலேயே, குலுக்கல் நடனமும் ஆடினார்.
இதனை பார்த்த பின்னால் இருந்த அந்த இளம்பெண் அதிர்ச்சியில், காரின் மேல் தலை சாய்த்து படுத்து கொண்டார். அந்த கார் சிறிது தூரம் சென்றது. துரதிர்ஷ்டவசத்தில் திடீரென்று, முன்னால் சென்ற வாகனம் நின்றதும், இந்த காரும் நின்று விட்டது.
அந்த வேகத்தில் முன்பக்கத்தில் நின்றிருந்த இளம்பெண் காரில் இருந்து வெளியே விழுந்து விட்டார். அதன்பின்னரே போதை தெளிந்துள்ளது. அவருக்கு உதவ சக பயணிகள் ஓடி வந்தனர். உடனே உஷாராகி எழுந்து மேலாடை இல்லாத முன்பகுதியை கைகளால் மறைத்து கொண்டார். சிலர் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினர்.
இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஓடும் காரில் இளம்பெண் சாகசம் செய்ய முயன்றதும், அவருக்கு போட்டியாக மற்றொரு இளம்பெண் மேலாடையை கழற்றி சாகசம் செய்ய முயன்றபோது விபரீதத்தில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.