புதுச்சேரி

காவிரி நீர் வராததால் கருகிய நெற்பயிர்கள்

நெடுங்காடு பகுதியில் காவிரிநீர் வராததால் நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

திருநள்ளாறு

காரைக்கால் மாவட்டத்தில் நெற்களஞ்சியமாக நெடுங்காடு தொகுதி திகழ்ந்தது. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. காவிரி நீர் முறையாக வராததாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததாலும் தற்போது ஆயிரம் ஏக்கராக குறைந்தது. நெடுங்காடு தொகுதி முழுவதும் தற்போது 300 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. காவிரிநீர் முறையாக வராததால் நெற்பயிர்கள் கருகி சருகாக மாறியது. இதுமட்டுமின்றி 300 ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் தரிசு நிலமாக காட்சியளிக்கிறது.

விவசாயிகள் வேதனை

ஒரு சில இடங்களில் பாய் நாத்து வைத்து ஒரு மாதம் ஆகியும் தண்ணீர் வராததால் முத்தி போய் வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பயிர்களையும் விவசாயத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை முறையாக கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து