புதுச்சேரி

பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

வில்லியனூர் அருகே தீராத நோயால் விரக்தி அடைந்த பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

தினத்தந்தி

வில்லியனூர்

வில்லியனூர் அருகே மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 44). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு  கோமதி என்ற மனைவியும். 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட நோயால் முருகன் பாதிக்கப்பட்டார். இதற்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முருகனுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு, கோமதி தனியார் கம்பெனி வேலைக்கு சென்றுவிட்டார். அன்று மாலை மனைவிக்கு போன் செய்த முருகன், ஆஸ்பத்திரியில் இருந்து தன்னை டிஸ்ஜார்ஜ் செய்துவிட்டதாக போனில் தெரிவித்துவிட்டு, வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார்.

இந்தநிலையில் வேலை முடிந்து கோமதி வீட்டுக்கு வந்தபோது, ஒரு அறையில் முருகன் தூக்கில் பிணமாக தொங்கினார். தீராத நோயால் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. முருகன் சாவு குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து