புதுச்சேரி

குளம் தூர்வாரும் பணி

புதுவையில் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

தினத்தந்தி

வில்லியனூர்

புதுவை மற்றும் காரைக்காலில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அதன்படி, ஊசுடு தொகுதி பிள்ளையார்குப்பத்தில் குளம் தூர்வாரும் பணி மற்றும் சுய உதவிக் குழுக்களின் நிறுவன நாள் நிகழ்ச்சி நடந்தது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சாய்.சரவணன்குமார் கலந்துகொண்டு குளத்து பகுதியில் மரக்கன்று நட்டார். பின்னர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் துறை செயலாளர் நெடுஞ்செழியன், மாநில திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அதிகாரி வைஷாக் பாகி மற்றும் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் கலந்துகொண்டனர். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு