புதுச்சேரி

இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுவையில் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் தேசிய கல்வி கொள்கை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தக்கூடாது, அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் காலாப்பட்டு பல்கலைக்கழகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் கோபி தலைமை தாங்கினார். செயலாளர் பிரவீன்குமார், துணை தலைவர் அபிஜித் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் வந்தனா, சாய், விஜீஷ் மற்றும் நூருதீன் மற்றும் மாணவர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

---

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை