பெங்களூரு

சாலை பள்ளங்களை மூட 225 வார்டுகளுக்கு தலா ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு

பெங்களூருவில் சாலை பள்ளங்களை மூட 225 வார்டுகளுக்கு தலா ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் மீண்டும் பள்ளங்களும், குழிகளும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நகரில் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசலும், சில சாலைகளில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள சாலைகளில் பள்ளங்களை மூடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது. இதையடுத்து, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்துடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 225 வார்டுகளிலும் சாலை பள்ளங்களை மூடவும், சீரமைக்கவும் தலா ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள சாலைகளை சீரமைக்க தலா ரூ.15 லட்சம் ஒதுக்கி இருப்பதை மாநகராட்சி தலைமை கமிஷனர் உறுதிப்படுத்தி உள்ளார். இதையடுத்து, நவம்பர் மாதத்தில் இருந்து சாலைகள் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு (2022) ஒவ்வொரு வார்டுகளுக்கும் தலா ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூ.5 லட்சம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்