மும்பை

விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்ட ரூ.2.23 கோடி கஞ்சா செடிகள் பறிமுதல்

விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்ட ரூ.2.23 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது

ஜல்னா, 

ஜல்னா மாவட்டத்தில், போகர்தான் தாலுகா கல்யாணி கிராமத்தில் விவசாய நிலத்தில் கஞ்சா செடிக்கள் சட்டவிரோதமாக வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊரக போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அந்த விவசாய நிலத்திற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது அங்கிருந்து சுமார் 725 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டன. இந்த ஒவ்வொரு செடியும் 4 முதல் 5 கிலோ எடை கொண்டதும், 8 முதல் 10 அடி உயரம் கொண்டதுமாக இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 2 கோடியே 23 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட கவுஸ்கான் பதான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். ஜல்னாவில் சட்டவிரோதமாக கஞ்ச பயிரிடப்படுவதை தடுக்க போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு