பெங்களூரு

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூரு:

துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வருவாய் நுண்ணறிவு இயக்குனரக அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் அவரிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அவர், உடைமைகளில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பயணியிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 1 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பயணி கர்நாடக-கேரள எல்லையில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு