புதுச்சேரி

பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்

காரைக்காலில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கல்வித்துறை துணை இயக்குனர் (மேல்நிலை கல்வி) ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.

ஆதிதிராவிடர் நலத்துறை உதவி இயக்குனர், முதன்மை கல்வி அதிகாரி, அரசு அதிகாரிகள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், அனைத்து மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் கல்வி உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய அதிகாரிகள், உதவித்தொகை பெறுவதற்கு தேவையான சான்றிதழை வருவாய்த்துறை வழங்கும் என தெரிவித்தார்கள். அவசியம் ஏற்பட்டால் சிறப்பு முகாம் நடத்துவது என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் குடியிருப்பு சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகியவற்றை புதிதாக வாங்க தேவையில்லை என்றும், அதன் பழைய நகல்களை ஒவ்வொரு வருடமும் புதுப்பித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்கள். அக்டோபர் 31-ந் தேதிக்குள் உதவித்தொகைக்காக அந்தந்த பள்ளிகள் சார்பாக ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்ப ஆவன செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்