புதுச்சேரி

புதிய பணியிடங்கள் குறித்த விவரங்களை உடனே அனுப்புங்கள்

புதுவையில் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட புதிய பணியிடங்கள் குறித்த விவரங்களை உடனே நிதித்துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜூலை முதல் வாரத்தில் புதுச்சேரி வர திட்டமிட்டுள்ளார். அவரது வருகையை தொடர்ந்து முன்தயாரிப்பு பணிகளில் அரசுத்துறைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் புதுவை அரசுத்துறைகளில் புதியதாக பணியிடங்களை உருவாக்குவது தொடர்பாக ஒப்பதல் கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவுகள், அதில் இதுவரை அனுமதி வழங்கப்படாத பணியிடங்கள் குறித்த விவரங்களை வெள்ளிக்கிழமைக்குள் நிதித்துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான குறிப்பாணையை நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் அனைத்து அரசுத்துறை செயலாளர்கள், இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும் புதுவை அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளி விவரத்துறை இணை செயலாளரான பக்கிரிசாமி இயக்குனர் பொறுப்பினையும் மறு உத்தரவு வரும்வரை கூடுதலாக கவனிப்பார் என்றும் நிதித்துறை துணை செயலாளர் ரத்னகோஷ் கிஷோர் சவுரி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு