சினிமா துளிகள்

விரைவில் மங்காத்தா-2.. அறிவித்த வெங்கட்பிரபு

மங்காத்தா 2-ம் பாகம் விரைவில் உருவாகும் என்று இயக்குனர் வெங்கட்பிரபு அறிவித்துள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினியின் எந்திரன் 2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி ஆகிய படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம், சுந்தர்.சி-யின் அரண்மனை 3 பாகங்கள் வந்தன. கமலின் இந்தியன் 2-ம் பாகம் தற்போது தயாராகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா நடித்து 2011-ல் வெளியான மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மங்காத்தா 2-ம் பாகம் விரைவில் உருவாகும் என்று வெங்கட்பிரபு அறிவித்து உள்ளார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை சிறப்பாக வந்துள்ளது என்றும், மங்காத்தா 2 கதையை அஜித்திடம் தெரிவித்து விட்டேன் என்றும் கூறி உள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து