காமன்வெல்த்-2022

காமன்வெல்த்: ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்

ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூரின் ஜியா ஹெங் தேவை வீழ்த்தி கிடாம்பி ஸ்ரீகாந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்.

தினத்தந்தி

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த்தில் இந்தியா இதுவரை 17 தங்கம், 13 வெள்ளி, 20 வெண்கலம் என 50 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5- வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சிங்கப்பூரின் ஜியா ஹெங் தேவை எதிர் கொண்டார். இப்போட்டியில் 21-15, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்