ஒலிம்பிக் 2024

துப்பாக்கி சுடுதல் போட்டி: வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு இந்திய இணை தகுதி

33-வது ஒலிம்பிக் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

பாரீஸ்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரீஸ் ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 4-வது நாளான இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்றில் இந்திய இணைகளான சரப்ஜோத் சிங்- மனு பாக்கர் மற்றும் அர்ஜுன் சிங் சீமா- ரிதம் சங்வான் கலந்து கொண்டனர்.

இதில் முதல் 2 இடங்களை பிடித்த துருக்கி மற்றும் செர்பிய அணிகள் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களுக்கான இறுதி போட்டியில் விளையாடுகின்றன.

3-வது இடம் பிடித்த இந்திய இணையான சரப்ஜோத் சிங்- மனு பாக்கர் ஜோடி 4-வது இடம்பிடித்த தென் கொரிய இணையுடன் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் மல்லுகட்ட உள்ளது. 

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்