நாடாளுமன்ற தேர்தல்-2024

தென்னிந்தியாவில் இருந்து பா.ஜ.க. துடைத்து எறியப்பட்டு விட்டது: ஜெய்ராம் ரமேஷ்

தென்னிந்தியாவில் இருந்து பா.ஜ.க. துடைத்து எறியப்பட்டு விட்டது. நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் பாதியாக குறைந்து விட்டது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

தினத்தந்தி

ராஞ்சி,

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, பிரதமர் மோடி வாக்காளர்களை மதரீதியாக பிரித்து விட்டார். ஆனால், இந்து-முஸ்லிம் அரசியலை ஒருபோதும் செய்யவில்லை என தற்போது பொய் கூறி வருகிறார் என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியேற கூடிய பிரதமராக உள்ளார். தொடக்க நிலையிலான தேர்தல் முடிவுகளே அவருடைய நம்பிக்கையின்மையை காட்டுகின்றன. அமித்ஷாவும் வெளியேற கூடிய உள்துறை மந்திரியாக உள்ளார். ஜூன் 4-ந்தேதிக்கு பின்னர், பொய்களின் பெருந்தொற்றுகளில் இருந்து நாம் வெளிவருவோம் என்று அவர் கூறியுள்ளார்.

மோடியின் உத்தரவாதம், இடிந்து விழுந்த ஒரு பிளாட் என கூறிய அவர், வளர்ச்சிக்கான பாரதம் பற்றிய பேச்சே இல்லை. இந்து மற்றும் முஸ்லிம் ஆகியோரை சுற்றியே பா.ஜ.க.வின் பிரசாரம் இருந்தது என்றும் கூறியுள்ளார்.

இந்தியா கூட்டணியானது, மத்தியில் அடுத்த அரசை அமைக்கும் என கூறிய ரமேஷ், அப்போது நாடு முழுவதிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்றும் கூறியுள்ளார். தென்னிந்தியாவில் இருந்து பா.ஜ.க. துடைத்து எறியப்பட்டு விட்டது. நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் பாதியாக குறைந்து விட்டது என்றும் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்