கோப்புப்படம் 
நாடாளுமன்ற தேர்தல்-2024

மேற்கு வங்காளத்தில் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கட்சியும் பா.ஜனதாவின் இரு கண்கள் - மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் காங்கிரசுக்கு போடும் ஓட்டு, மோடிக்கு உதவி விடும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டம் கலியாசாக் என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:-

மேற்கு வங்காளத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் எவ்வித உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச விரும்பினோம். ஆனால், காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை.மார்க்சிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இரு கட்சிகளும் பா.ஜனதாவுடன் கைகோர்த்து செயல்படுகின்றன.

பா.ஜனதாவின் குரலிலேயே பேசுகின்றன. காங்கிரசுக்கோ, மார்க்சிஸ்ட் கட்சிக்கோ ஓட்டு போட்டால், அது பா.ஜனதா எதிர்ப்பு ஓட்டுகளில் பிளவை உண்டாக்கி, இறுதியில் பிரதமர் மோடிக்கு சாதகமாகி விடும். காங்கிரசும், மார்க்சிஸ்ட் கட்சியும் பா.ஜனதாவின் இரு கண்கள்.

மேற்கு வங்காளத்தில் 'இந்தியா' கூட்டணி இல்லை. வேறு மாநிலங்களில்தான் அக்கூட்டணி இருக்கிறது. இங்கு மோடி அரசுக்கு எதிரான போரை நாங்கள் தனியாகவே நடத்துவோம். தேர்தலுக்கு பிறகு 'இந்தியா' கூட்டணி ஆட்சி அமைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும். 'இந்தியா' என்ற பெயரை நான்தான் வைத்தேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து