கோப்புப்படம் 
நாடாளுமன்ற தேர்தல்-2024

டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் 10 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் மூத்த தலைவர் அகர்வால், வடகிழக்கு டெல்லியில் கன்னையா குமார் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை கட்சித்தலைமை அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. அந்தவகையில் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

இதில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் மூத்த தலைவர் அகர்வால், வடகிழக்கு டெல்லியில் கன்னையா குமார், வடமேற்கு டெல்லியில் உதித்ராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

பஞ்சாப்பின் பாட்டியாலா தொகுதியில் தர்விர் காந்தி நிறுத்தப்பட்டு உள்ளார். இவர் ஆம் ஆத்மியில் இருந்து சமீபத்தில் காங்கிரசில் இணைந்தவர் ஆவார். இதைத்தவிர அமிர்தசரஸ், பதேகார் சாகிப் உள்ளிட்ட தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் உத்தரபிரதேசத்தின் அலகாபாத் தொகுதியில் உஜ்வல் ரேவதி ராமன் சிங் வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளார். சமாஜ்வாடி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் சமீபத்தில்தான் காங்கிரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்