கோப்புப்படம் 
நாடாளுமன்ற தேர்தல்-2024

காங்கிரசின் 'மகாலட்சுமி' திட்டம் ஏழை பெண்களுக்கு வரப்பிரசாதம் - சோனியாகாந்தி

ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று சோனியாகாந்தி தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, நேற்று ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார்.

அதில் பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி 'மகாலட்சுமி' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். பெண்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, 'மகாலட்சுமி' திட்டம் ஏழை பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

ஏற்கனவே காங்கிரசின் உத்தரவாதங்கள், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்துள்ளன. 100 நாள் வேலைத்திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், கல்வி உரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் என எந்த திட்டமாக இருந்தாலும், அவற்றின் மூலம் காங்கிரஸ் கட்சி கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. ஆகவே, இந்த சிக்கலான தருணத்தில், காங்கிரசின் கை உங்களுடன் இருக்கிறது. இந்த கை உங்கள் சூழ்நிலையை மாற்றும்" என்று சோனியாகாந்தி கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்