நாடாளுமன்ற தேர்தல்-2024

உயிருக்கு ஆபத்து... கண்ணீருடன் சுயேட்சை வேட்பாளர் பரபரப்பு புகார்

கோவையில் தனது உயிருக்கு ஆபத்து என மனு அளித்தும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று சுயேட்சை வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

கோவை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் தனது உயிருக்கு ஆபத்து என மனு அளித்தும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று சுயேட்சை வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் நூர்முகமது என்பவர், சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என, கண்ணீர் மல்க குற்றம் சாட்டியுள்ளார். இவர் இதுவரை 43 முறை சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து