கோப்புப்படம் 
நாடாளுமன்ற தேர்தல்-2024

தேர்தல் முடிவடைவதற்கு முன்னரே கருத்துக்கணிப்பு வெளியிட்ட டி.வி. சேனல் - நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

தேர்தல் முடிவடைவதற்கு முன்னரே ஒடிசாவில் கருத்துக்கணிப்பு வெளியிட்ட டி.வி. சேனல் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட வேண்டும். அந்தவகையில் வருகிற 1-ந் தேதி 6.30 மணி வரை கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.

ஆனால் இதையும் மீறி ஒடிசாவில் தனியார் டி.வி. சேனல் ஒன்று நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட்டது. மாநிலத்தில் கடைசி கட்ட நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற தேர்தல் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.

எனவே தேர்தல் முடிவடைவதற்கு முன்னரே கருத்துக்கணிப்பு வெளியிட்ட அந்த டி.வி. சேனல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து