நாடாளுமன்ற தேர்தல்-2024

மராட்டிய மாநிலத்தில் சுயேச்சையாக வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

மராட்டிய மாநிலத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் சங்லி மக்களவை தொகுதியில் விஷால் பட்டீல் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் முன்னாள் மராட்டிய முதல்-மந்திரி வசந்த்தாதா பட்டீலின் பேரன் ஆவார். இவர் சங்லி தொகுதியில் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா(உத்தவ் தாக்கரே) அணி வேட்பாளர் சந்திரஹர் சுபாஷ் பட்டீல், பா.ஜ.க. வேட்பாளர் சஞ்சய் பட்டீல் ஆகியோரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் விஷால் பட்டீல் டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சங்லி தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஷால் பட்டீலை காங்கிரஸ் கட்சிக்கு வரவேற்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்