Image Courtesy : PTI 
நாடாளுமன்ற தேர்தல்-2024

தேர்தல் ஆணையரை சந்திக்க 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் நாளை டெல்லி பயணம்

‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தேர்தல் ஆணையரை சந்திப்பதற்காக நாளை டெல்லி செல்ல உள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தேர்தல்களில் பதிவான வாக்கு சதவிகிதம் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.

இதனிடையே தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவிகித விவரங்களில் குளறுபடி உள்ளதாக 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 'இந்தியா' கூட்டணி தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் நாளை டெல்லி செல்ல உள்ளனர். அங்கு இந்திய தேர்தல் ஆணையரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்பின்போது வாக்குப்பதிவு சதவிகிதம் குறித்த விவரங்களை முறையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்த உள்ளனர். மேலும் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க.வினர் மத விவகாரங்களை பயன்படுத்துவது குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து