நாடாளுமன்ற தேர்தல்-2024

நாடாளுமன்ற தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? கமல்ஹாசன் விளக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையை தொடங்கினார்.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் கே.இ. பிரகாஷுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையை தொடங்கினார்.

இந்த பரப்புரையின்போது நாடாளுமன்ற தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என அவர் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக கமல்ஹாசன் கூறியதாவது,

ஈரோட்டில் எனது பிரசாரத்தை தொடங்க பெரியார் ஒரு காரணம். ஈரோட்டில் இடைத்தேர்தலின் போது நான் இங்கே வந்த போது நீங்கள் காட்டிய அன்பும் மற்றொரு காரணம்.நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடாடாததற்கு காரணம் தியாகம் என கூறுகிறார்கள் . ஆனால் அது தியாகம் அல்ல , வியூகம் . தமிழ்நாடு காக்கும் வியூகம். என தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து