கோப்புப்படம் 
நாடாளுமன்ற தேர்தல்-2024

நீலகிரி மக்களவைத் தொகுதி: வெற்றியை உறுதி செய்த ஆ.ராசா

நீலகிரி மக்களவைத் தொகுதியில் சுமார் 2.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா முன்னிலையில் உள்ளார்.

தினத்தந்தி

உதகை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.தற்போதைய நிலவரப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா, தற்போது 2,40,585 வாக்குகள் வித்தியாசத்தில் ( மொத்தம் 4,73,212 வாக்குகள்) தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

அவரைத்தொடர்ந்து பா.ஜனதா வேட்பாளர் எல்.முருகன் 2,32,627 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் 2,20,230 வாக்குகள் பெற்று 3-வது இடத்திலும் உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா அனைத்து சுற்றுகளிலும் முன்னணியில் இருந்து வந்தார். தற்போது அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனை பின்னுக்குத் தள்ளி பா.ஜனதா வேட்பாளரும், மத்திய இணை மந்திரியுமான எல்.முருகன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இதனிடையே திமுக வேட்பாளர் ஆ.ராசா கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட இந்தத் தேர்தலில் கூடுதல் வித்தியாசத்துடன் முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து