நாடாளுமன்ற தேர்தல்-2024

4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

நாடாளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 19) தொடங்கி வரும் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. இந்த 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், தெலங்கானா, பீகார், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், மராட்டியம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு தொகுதிகள் 4-வது கட்ட தேர்தலை எதிர்கெள்கின்றன. ஆந்திரபிரதேசத்தில் மே 13-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து