நாடாளுமன்ற தேர்தல்-2024

பிரதமர் மோடியின் பிரசாரம் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக அமைந்திருக்கிறது - அமைச்சர் மனோ தங்கராஜ்

பிரதமர் மோடியின் பிரசாரம் சாதியை முன்வைத்து மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவே அமைந்திருக்கிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் மோடியின் பேச்சு, முழுக்க முழுக்க மதத்தையம், சாதியையும் முன்வைத்து மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவே அமைந்திருக்கிறது.குறிப்பாக 06/04/2024 அன்று, உத்திர பிரதேசத்தில் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் அறிக்கை போல இருப்பதாக பேசினார்.

08/04/2024 அன்று, பீகாரில் பேசுகையில், காங்கிரஸ் கட்சி ராமரை இழிவுபடுத்தியதாகக் கூறினார்.

09/04/2024 அன்று, உத்திர பிரதேசத்தில் பேசுகையில், நவராத்ரி முதல் நாளன்று தேவியை வணங்குபவர்கள் காங்கிரசையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், நல்ல சாதியை சார்ந்த ஒருவர் தங்கள் கட்சி தலைவராக இருப்பதாகக் கூறி, பிற சமூக மக்கள் அனைவரையும் இழிவுபடுத்தினார்

இவை அனைத்தும் வன்மையான கண்டனத்திற்குரிய பேச்சு. இப்பேர்பட்ட ஒருவர் இந்திய நாட்டின் பிரதமர் என்று சொல்வது இந்தியாவிற்கே தலைகுனிவு. என தெரிவித்துள்ளார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து