நாடாளுமன்ற தேர்தல்-2024

நாடாளுமன்ற இடைக்கால சபாநாயகர் பதவியேற்பு

நாடாளுமன்ற இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹ்ரி மஹ்தாப் பதவியேற்றுக்கொண்டார்.

தினத்தந்தி

டெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பாஜக தனித்து 240 இடங்களை கைப்பற்றியது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக ஆட்சியமைத்தது.

இதனிடையே 18வது நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 543 எம்.பி.க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது.

புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஏதுவாக தற்காலிக சபாநாயகராக பாஜகவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார். பர்த்ருஹரி மஹ்தாப் 7 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மஹ்தாப்பிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தற்காலிக சபாநாயகராக மஹ்தாப் பதவியேற்றுக்கொண்டார்.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி