நாடாளுமன்ற தேர்தல்-2024

நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மீது பரபரப்பு புகார்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நீலகிரி உதவி செலவின பார்வையாளர் கடிதம் எழுதியுள்ளார்.

தினத்தந்தி

நீலகிரி,

நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மீது, நீலகிரி உதவி செலவின பார்வையாளர் சரவணன் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "குறிப்பிட்ட வேட்பாளர் ஒருவரின் செலவினக் கணக்கை மறுபரிசீலனை செய்வதற்கான வழிகளை கண்டறிய மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பிக்கிறார். செலவை குறைக்க தேர்தல் அதிகாரி என்னை தொடர்ந்து துன்புறுத்துகிறார்.

உதவி செலவின பார்வையாளராக நியாயமான தேர்தலை உறுதி செய்யும் எனது உரிமைகள் ஆபத்தான நிலையில் இருக்கின்றன. செலவின பதிவுகளால் வேட்பாளருக்கு பாதகமாக ஏதேனும் நடந்தால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டல் விடுக்கிறார். நீலகிரி தொகுதியில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை