Image Courtacy: PTI 
நாடாளுமன்ற தேர்தல்-2024

தேர்தலில் தலையீடு: மேற்கு வங்காள கவர்னர் மீது தேர்தல் கமிஷனில் புகார்

நாடாளுமன்ற தேர்தலில் கவர்னர் தலையிடுவதாக தேர்தல் கமிஷனில் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அந்த மாநில கவர்னராக ஆனந்த போஸ் உள்ளார்.

பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பது உள்பட பல்வேறு விவகாரங்களில் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில் மாநிலத்தில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கவர்னர் ஆனந்த போஸ் தலையிடுவதாக கூறி அவர் மீது தேர்தல் கமிஷனில் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "2024 மக்களவை தேர்தலில் தொடர்ந்து தலையிட்டு வருவது குறித்தும், வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்ல முயற்சிப்பது தொடர்பாகவும் ஆனந்த போஸ் மீது தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு