கோப்புப்படம் 
நாடாளுமன்ற தேர்தல்-2024

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தமிழகம் வருகை

பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தமிழகம் வர உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், நாளை தமிழகம் வர உள்ளார்.

டெல்லியில் இருந்து நாளை காலை பெங்களூரு செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூருக்கு வருகை தருகிறார். அங்கு, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சி.நரசிம்மனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். அதன்பிறகு, ஹெகாப்டரில் சிதம்பரத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

பிறகு, தஞ்சாவூர் பயணம் மேற்கொள்கிறார். அங்கு, தஞ்சாவூர் பா.ஜனதா வேட்பாளர் எம்.முருகானந்தத்துக்கு ஆதரவாக வாக்குசேகரிக்கிறார். மறுநாள் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், மத்திய இணை மந்திரியுமான எல்.முருகனுக்கு ஆதரவு திட்டுகிறார்.

பின்னர், மாலை கோவை சென்று, அங்கு கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். அடுத்ததாக, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கே.வசந்தராஜனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது