நாடாளுமன்ற தேர்தல்-2024

நாடாளுமன்ற தேர்தலுக்குப்பிறகு மத்தியில் எந்த கூட்டணியிலும் இணைய மாட்டோம்: மிசோரம் முதல்-மந்திரி அறிவிப்பு

டெல்லியில் இருந்து எங்களை யாரும் கட்டுப்படுத்துவதை விரும்பவில்லை என்று மிசோரம் முதல்-மந்திரி சோரம்தங்கா கூறியுள்ளார்.

தினத்தந்தி

ஐஸ்வால்,

நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில் மிசோரமின் ஒரே தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதையொட்டி முதல்-மந்திரியும், சோரம் மக்களின் முன்னணி தலைவருமான லால்டுகோமா தலைநகர் ஐஸ்வாலில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி ஒன்றில் தனது வாக்கை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், தேர்தலுக்குப்பிறகு மத்தியில் எந்த கூட்டணியிலும் இணைய மாட்டோம். தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது இந்தியா கூட்டணி என எந்த அணியிலும் சேரமாட்டோம். எங்கள் அடையாளத்தை பாதுகாக்க விரும்புகிறோம். டெல்லியில் இருந்து எங்களை யாரும் கட்டுப்படுத்துவதை விரும்பவில்லை.

எந்தவொரு பிரச்சினையிலும் இங்கிருந்தவாறே சுதந்திரமாக முடிவு எடுக்க விரும்புகிறோம்' என்று கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை