கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் 2-வது ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

தினத்தந்தி

சவுதம்டன்,

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 40 ரன்களும், ஸ்டோனிஸ் 35 ரன்களும், மேக்ஸ்வெல் 26 ரன்களும் எடுத்தனர்.

வார்னர் (0), ஸ்டீவன் சுமித் (10 ரன்) ஏமாற்றம் அளித்தனர். அடுத்து களம் கண்ட இங்கிலாந்து அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஆட்டம் இழக்காமல் 77 ரன்களும் (54 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் மலான் 42 ரன்களும், மொயீன் அலி 6 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 13 ரன்களும் (நாட்-அவுட்) விளாசினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து