கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

தினத்தந்தி

மான்செஸ்டர்,

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. கேப்டன் பாபர் அசாம் (56 ரன்), முகமது ஹபீஸ் (69 ரன்) அரைசதம் அடித்தனர்.

அடுத்து களம் இறங்கி அதிரடி காட்டிய இங்கிலாந்து 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் இயான் மோர்கன் 66 ரன்களும் (33 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), டேவிட் மாலன் 54 ரன்களும், பேர்ஸ்டோ 44 ரன்களும் விளாசினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து