கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை - சூர்யகுமார் யாதவ் முதலிடம்

பந்து வீச்சாளர் தரவரிசையில் அடில் ரஷித் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (887 புள்ளி) 'நம்பர் ஒன்' இடத்தில் கம்பீரமாக தொடருகிறார்.

2-வது இடத்தில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானும் (787 புள்ளி), 3-வது இடத்தில் தென்ஆப்பிரிக்காவின் மார்க்ரமும் (755 புள்ளி) இருக்கிறார்கள். இதன் பந்து வீச்சாளர் தரவரிசையில் ரஷித்கானை (ஆப்கானிஸ்தான்) பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதல்முறையாக 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்