கிரிக்கெட்

2-வது ஒரு நாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெறுகிறது.

தினத்தந்தி

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

பெர்த்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் பலமுறை மழை குறுக்கிட்டதால் முழு உத்வேகத்தை பார்க்க முடியவில்லை. 26 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் இந்திய அணி 136 ரன்களே எடுத்தது. லோகேஷ் ராகுல் (38 ரன்கள்), அக்ஷர் பட்டேல் (31 ரன்கள்) தவிர மற்றவர்கள் ஏமாற்றம் அளித்தனர். அந்த எளிய இலக்கை ஆஸ்திரேலியா 21.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்