கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க 'ஏ'அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்திய ஏ அணி 276 ரன்களில் ஆல் அவுட்

முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய ஏ அணி 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

தினத்தந்தி

ப்ளூம்போண்டைன் ,

இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்போண்டைனில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது . மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 9 ஆம் தேதி முடிவடைகிறது.

இரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க ஏ அணி, முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்க ஏ அணியில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 70 ரன்கள் எடுத்தார்.

இந்திய 'ஏ' சார்பில் நவ்தீப் சைனி, இஷான் போரெல் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய ஏ அணி 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .இந்திய 'ஏ' சார்பில் அதிகபட்சமாக சர்ப்ராஸ் கான் 71 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து மூன்றாம் நாள் ஆட்டமான இன்று தென் ஆப்பிரிக்க ஏ அணி 21 ரன்கள்( முன்னிலை )பெற்று இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது .

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு