கிரிக்கெட்

3வது ஒரு நாள் போட்டி: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.

வொர்செஸ்டர்,

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடிய லாரன் (36), பியூமோன்ட் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து விளையாடிய அந்த அணியின் கேப்டன் ஹீதர் நைட் (46), சிவெர் (49) ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அவர்கள் ஆட்டமிழந்த பின்பு சோபியா (28), எமி ஜோன்ஸ் (17) ரன்களில் வெளியேறினர். எனினும் அடுத்தடுத்து குறைந்த ரன்களில் வீராங்கனைகள் ஆட்டமிழந்தனர். கேத் கிராஸ் (16) ஆட்டமிழக்கவில்லை.

அந்த அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் சேர்த்தது.

இதன்பின் ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான செஃபாலி வர்மா (19), மந்தனா (49) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜெமிமா 4 ரன்களில் வெளியேறினார்.

ஆனால், இந்திய கேப்டன் மிதாலி ராஜ் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவர் 86 பந்துகளில் 8 பவுண்டரிகள் விளாசி 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். சர்வதேச அளவிலான சாதனையையும் இந்த போட்டியில் அவர் படைத்துள்ளார்.

ராஜ் 10 ஆயிரத்து 273 ரன்களை கடந்து உள்ளார். இங்கிலாந்து முன்னாள் பேட்டிங் வீராங்கனையான சார்லோட் எட்வார்ட்சின் சாதனையை ராஜ் முறியடித்து உள்ளார்.

இதனால், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து நிலைகளிலான சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் ஹர்மன்பிரீத் (16), தீப்தி (18), ஸ்னேஹ ராணா (24) ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜூலன் கோசுவாமி (1) ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில் இந்திய அணி 46.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. இதனால் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...