கிரிக்கெட்

3வது டெஸ்ட்: ஜடேஜா, பண்ட் அடுத்தடுத்து காயம்; மாற்று வீரர்கள் அறிவிப்பு

3வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா மற்றும் பண்ட் அடுத்தடுத்து காயம் அடைந்த சூழலில் மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

சிட்னி,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில், டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. 105.4 ஓவர்களில் அந்த அணி 338 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து விளையாடியது.

இதில், அணி வீரர் ரிஷாப் பண்ட் பேட்டிங் செய்தபொழுது, கம்மின்ஸ் பந்து வீச்சில் வந்த பந்தினை அடித்து விளையாட பண்ட் முற்பட்டார். ஆனால் அது தவறி அவரது இடது முழங்கையில் பட்டது. இதனால் வலியால் துடித்த பண்டுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடக்கத்தில் நன்றாக ஆட தொடங்கிய பண்ட் 4 பவுண்டரிகள் விளாசினார். அவருக்கு காயம் ஏற்பட்ட பின்னர் அவரது ரன் விகிதம் குறைய தொடங்கியது. 67 பந்துகளில் 36 ரன்களே அவரால் எடுக்க முடிந்தது. பின்னர் ஹேசில்வுட் பந்துவீச்சில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதேபோன்று இன்றைய ஆட்டத்தில் ஜடேஜாவுக்கும் இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் காயம் அடைந்த பின்னர் அவரது ரன் விகிதமும் சரிந்தது. இதனால், 37 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஜடேஜா ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்திய அணி வீரர்களுக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த காயங்களால் போட்டியில் விளையாடுவதில் அவர்களுக்கு சிக்கலான நிலை ஏற்பட்டு உள்ளது. பண்டுக்கு பதிலாக சஹா கீப்பிங் செய்வார் என கூறப்படுகிறது.

இதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் 2வது இன்னிங்சில் ஜடேஜாவுக்கு பதிலாக மயங்க் அகர்வால் பீல்டிங் செய்வார். இந்திய வீரர் ரிஷாப் பண்ட் பேட்டிங் செய்தபொழுது ஏற்பட்ட காயத்திற்காக ஸ்கேன் செய்ய கொண்டு செல்லப்பட்டார் என பி.சி.சி.ஐ. அறிவித்து உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு