கிரிக்கெட்

3-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க 'ஏ' -இந்திய'ஏ'அணிகள் மோதிய போட்டி 'டிரா'

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது.

ப்ளூம்போண்டைன் ,

இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்போண்டைனில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா ஏ அணியுடன் விளையாடி வருகிறது .

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஏ அணியின் கேப்டன் பீட்டர் மலன் பேட்டிங்யை தேர்வு செய்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .சிறப்பாக விளையாடிய சரேல் ஏர்வி 75 ரன்கள் எடுத்தார் .இந்திய அணி தரப்பில் தீபக் சாகர் 4 விக்கெட்களையும் , நவ்தீப் சைனி 3 விக்கெட்களையும் , கைப்பற்றினர்.

இதை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சற்று தடுமாறியது. . பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹனுமா விஹாரி - இஷான் கிஷன் இணை சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.

சிறப்பாக விளையாடிய ஹனுமா விஹாரி 63 ரன்களிலும் , இஷான் கிஷன் 91 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 276 ரன்கள் குவித்தது.

8 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய தென்னாபிரிக்க அணி 3 வது நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.

இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா ஏ அணி 3 விக்கெட் 311 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.சிறப்பாக விளையாடிய தென் ஆபிரிக்க ஏ அணி வீரர்ஜுபைர் ஹம்சா சதம் அடித்தார்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இந்திய ஏ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டத்தை தொடர முடியாமல் போனது . 4 வது நாள் ஆட்ட நேர முடிவால் தென்னாப்பிரிக்கா ஏ ,இந்திய ஏ அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு