கிரிக்கெட்

’கிரிக்கெட்டில் ஆல்-ரவுண்டர்களுக்கே அதிக வாய்ப்பு’ - சாய் கிஷோர்

சாய் கிஷோர் தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார்.

சென்னை,

தமிழக கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர், கிரிக்கெட்டில் ஆல்- ரவுண்டர்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகி வருவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இப்போது ஆல் ரவுண்டர்களுக்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு அணிக்கு பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் திறமையான வீரர்கள் தேவைப்படுகிறார்கள். போட்டியின் நிலைமையைப் பொறுத்து எந்த ரோலுக்கு யார் பொருத்தமானவர்களோ, அவர்களை அணிகள் பயன்படுத்திக் கொள்கின்றன,” என்றார்.

சாய் கிஷோர் தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். அணியின் தேவைக்கு ஏற்ப பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார்.